தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி – முதல்வர் அறிக்கை!!
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்றுள்ள ரூ.12,110 கோடி பயிர்க்கடன் 110 விதியின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் மற்றும் தமிழக முதல்வரின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். இந்நிலையில் தற்போது தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்கடனை ரத்து செய்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 செயற்கைகோள்கள் – பிப்ரவரி 7ம் தேதி விண்ணில் ஏவ திட்டம்!!
2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தாக்கம், நிவர், புரவி புயல் சேதாரங்கள் காரணமாக விவசாய பயிர்கள் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே தமிழக முதல்வர் இன்று சட்டபேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடனை ரத்து செய்வதாக 110 விதியின் கீழ் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இந்த கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாசியிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அதற்கான நிதி ஆதாரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்