தமிழகத்தில் 25% கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க முடிவு – மின்வாரியம் திடீர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 25% கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க முடிவு - மின்வாரியம் திடீர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலை நிறுவனங்களில் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு 25% கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கும் பொருட்டு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக 6 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை அரசு அப்போது மாற்றி அமைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 2 லட்சத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எம்எ.ஸ்எ.ம்இ. என்று அழைக்கப்படும் இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் மின்சார பயன்பாடு இருந்து வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால், இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஜூன் மாதத்திற்கு பிறகு எலக்ட்ரானிக் மின் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மின்மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டும் கூடுதலாக 25% மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!