தமிழகத்தில் தியேட்டர்கள், பார்கள் மூடல் – புதிய கட்டுப்பாடுகளின் முழு விபரம் இதோ!!

1
தமிழகத்தில் தியேட்டர்கள், பார்கள் மூடல் - புதிய கட்டுப்பாடுகளின் முழு விபரம் இதோ!!
தமிழகத்தில் தியேட்டர்கள், பார்கள் மூடல் - புதிய கட்டுப்பாடுகளின் முழு விபரம் இதோ!!
தமிழகத்தில் தியேட்டர்கள், பார்கள் மூடல் – புதிய கட்டுப்பாடுகளின் முழு விபரம் இதோ!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை (ஏப்ரல் 26) முதல் தியேட்டர்கள், பார்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

தமிழ்நாடு முழுவதும்‌ பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு தளர்வுகளுடனும்‌, கட்டுப்பாடுகளுடனும்‌, 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 26ம் தேதி காலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது.

  • அனைத்து திரையரங்குகள்‌, உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, கேளிக்கைக்‌ கூடங்கள்‌, அனைத்து மதுக்கூடங்கள்‌, பெரிய அரங்குகள்‌. கூட்ட அரங்குகள்‌ போன்ற பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்கள்‌ இயங்க அனுமதி இல்லை.
  • பெரிய கடைகள்‌, வணிக வளாகங்கள்‌ இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறி கடைகள்‌ மற்றும்‌ இதர அனைத்து கடைகளும்‌ உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம்‌ போல்‌ செயல்பட அனுமதிக்கப்படும்.
  • எனினும்‌, வணிக வளாகங்களில்‌ இயங்கும்‌ பலசரக்கு கடைகள்‌ மற்றும்‌ காய்கறி கடைகளுக்கும்‌ அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ விற்பனை செய்யும்‌ பெரிய கடைகள்‌ குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில்‌ ஒரே சமயத்தில்‌ 50% வாடிக்கையாளர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்‌.
  • சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள்‌ மற்றும்‌ அனைத்து நகராட்சிகளில்‌, அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ இயங்க அனுமதி இல்லை.
  • அனைத்து உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌. உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்‌ கடைகளில்‌ உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில்‌ தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்‌ தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்‌. உணவுக்‌ கூடங்களில்‌ அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
  • அனைத்து மின்‌ வணிக சேவைகள்‌ வரையறுக்கப்பட்டுள்ள நேரக்‌ கட்டுப்பாடுகளுடன்‌ இயங்கலாம்‌.

TN Job “FB  Group” Join Now

  • அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ பொது மக்கள்‌ வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும்‌, தினமும்‌ நடைபெறும்‌ பூஜைகள்‌ / பிரார்த்தனைகள்‌ / சடங்குகளை, வழிபாட்டுத்‌ தல ஊழியர்கள்‌ மூலம்‌ நடத்துவதற்கு தடையில்லை.
  • கொரோனா நோய்த்‌ தொற்று அதிகரித்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, மதம்‌ சார்ந்த திருவிழாக்கள்‌ மற்றும்‌ கூட்டங்களுக்கு 10.4.2021 முதல்‌ தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்‌/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம்‌ அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம்‌ செய்திருந்து முன்னேற்பாடுகள்‌ செய்திருந்தாலோ, 50 நபர்கள்‌ பங்கேற்புடன்‌ நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
  • தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள்‌ பங்கேற்பு இல்லாமல்‌, கோயில்‌ பணியாளர்கள்‌ மட்டும்‌ கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல் – அரசு அறிவிப்பு!!

  • திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்ச்சிகளில்‌ 50 நபர்களுக்கு மேல்‌ பங்கேற்கக்‌ கூடாது. இறுதி ஊர்வலங்கள்‌ மற்றும்‌ அதைச்‌ சார்ந்த சடங்குகளில்‌ 25 நபர்களுக்கு மேல்‌ பங்கேற்கக்‌ கூடாது.
  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்ப சேவை நிறுவனங்களில்‌ குறைந்த பட்சம்‌ 50 சதவீத பணியாளர்கள்‌ வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்‌.
  • கோல்‌ஃப்‌, டென்னிஸ்‌ கிளப்‌ உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம்‌ / குழுமங்கள்‌ செயல்பட அனுமதி இல்லை. எனினும்‌, சர்வதேச மற்றும்‌ தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்படும்‌.
  • புதுச்சேரி தவிர்த்து, ஆந்திர பிரதேசம்‌, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில்‌ இருந்து தமிழ்நாட்டிற்கு வரும்‌ நபர்கள்‌ வலைதளத்தில்‌ பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள்‌ நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்‌.
  • வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம்‌ / கப்பல்‌ மூலம்‌ வரும்‌ பயணியர்‌ அனைவரும்‌ வலைதளத்தில்‌ பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள்‌ நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்‌.
  • ஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்துகளில்‌, இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌. பேருந்துகளில்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்ய அனுமதி இல்லை.
  • வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களில்‌, ஒட்டுநர்‌ தவிர்த்து மூன்று பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்கவும்‌, ஆட்டோக்களில்‌ ஒட்டுநர்‌ தவிர்த்து இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயஎிக்கவும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌.
  • தமிழ்நாட்டில்‌ இரவு நேர ஊரடங்கு மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!