தமிழகத்தில் இரவு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ரத்து? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளாக இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு உத்தரவினை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் 21 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாநில அரசு சார்பில் கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அரசு, தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஞாயிறு ஊரடங்கு காரணமாக மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்ற நாள்களில் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு – இ-பாஸ் விண்ணப்பிக்கும் முறை!!
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், “இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு உத்தரவினை ரத்து செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் எந்த பயனும் அளிக்காது என மனுதாரர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.