மே 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு – இ-பாஸ் விண்ணப்பிக்கும் முறை!!
உத்தரபிரதேசம் மாநில நொய்டா மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மே 12 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வருவோருக்கான இ-பாஸ் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.82 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் நொய்டா மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 12 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகள், மருத்துவ தேவைகளுக்கான இ-பாஸ் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அரசு ஆலோசனை!!
இ-பாஸ் தேவைப்படுவோர் rahat.up.nic.in அல்லது rahat.up.nic.in/epass என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, போன்ற ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட ஆவணம் தேவைப்படும். மேலும் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல இறப்பு நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.