தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – சுகாதாரத்துறை விளக்கம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு??
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு, சுகாதாரத்துறையினர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியுள்ளனர். இதற்கான முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு என சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை போல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு – இன்று துவக்கம்!!
மேலும் இதுகுறித்த விளக்கத்தையும் அரசு தெரிவித்துள்ளது. அதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பல தளர்வுகளுக்கு பின்னர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது போல் தற்போது ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.