தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் – முக ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!
கொரோனா தடுப்பு பெண்கள் குறித்து முக ஸ்டாலின் அவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவமனைகளில் மருந்து மற்றும் படுக்கை வசதிகளை உடனே அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை :
தமிழத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், ஊரடங்குகளையும் அறிவித்து மக்களை காக்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனாலும் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து, உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கபப்ட்ட மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பதால் கொரோனா சிகிக்சைகான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க ஸ்டாலின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோருடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
பத்திரிக்கையாளர்களும் முன்களப் பணியாளர்களே – மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!
அப்போது அவர் சென்னையில் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, எவ்வித தொய்வுமின்றி, முழு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என மு.க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்