தமிழகத்தில் ஒரே நாளில் 8449 பேருக்கு கொரோனா – 33 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமெடுத்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8449 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவி வருவது உறுதியாகியுள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. எனவே ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமை செயலாளர் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு !
இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 9,71,384 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 33 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 13,032 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,96,759 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் 61,593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.