தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மேலும் சில தளர்வுகள் அளித்து ஜூன் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 12 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அது 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல் அதிகளவில் வெளியே நடமாடுவதை காண முடிந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறைகள் – கொரோனா தொற்று எதிரொலி!
இதனால் தினசரி நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையும் 35 ஆயிரத்திற்கும் மேல் சென்றது. எனவே இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் அவர்கள், மே 24ம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று காய்கறி, பழங்கள், மளிகை மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அரசின் இந்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் ஜூன் 7ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டது. கடைகள் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பழைய 10 ரூபாய் தாளுக்கு ரூ.25,000 – முழு விபரங்கள் இதோ!
மேலும் சுயதொழில் புரிபவர்கள் இ-பதிவு பெற்று பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூன் 14ம் தேதியுடன் இந்த தளர்வுகள் முடிவுக்கு வர உள்ளன. இதனால் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா? என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.