சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் – அரசு கொடுத்த விளக்கம்!

0
சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் - அரசு கொடுத்த விளக்கம்!
தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு பிறகு , பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் , தீவுத்திடலை சுற்றி உள்ள சாலையில் பார்முலா 4 கார் பந்தயம்  நடத்த ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது. சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதால் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படும். அதனால் இந்த பந்தயத்தை இருங்காட்டுக் கோட்டை வளாகத்தில் நடத்தினால் தேவை இல்லாத செலவு ஏற்படுவதை தடுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கார் பந்தயம் நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கில், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது எனவும், வருகிற ஜூன் மாதத்திற்கு பின் சென்னை தீவுத்திடலை சுற்றி பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!