தமிழக கல்லூரி மாணவர்களுக்கு திறன் வளர் பயிற்சி – திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் தாக்கல்!!
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் கூடிய திறன் வளர் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அறிவிப்பு
தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம், பொறியியல் படிப்புகளை விட தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சமீபத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
ஆதாரில் புகைப்படத்தை மாற்ற விரும்புகிறீர்களா? எளிமையாக மாற்றலாம் – Easy Steps இதோ!!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மார் 10 லட்சம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் கூடிய திறன் வளர் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் இன்னசன்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.