தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு சனிக்கிழமை வேலைநாள் – CEO உத்தரவு!!
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலை நாளாக செயல்படுவது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் செயல்முறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
சனிக்கிழமை வேலைநாள்:
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால் அவர்களின் வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் சனிக்கிழமை வார விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மார்ச் 13ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, மதுரை மாவட்டத்தில் 2021 ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது சார்ந்து அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் 13.03.2021 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கு வராத 12ம் வகுப்பு மாணவர்களின் நிலை – கல்வித்துறை உத்தரவு!!
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்களில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடம் நடத்தும் 50 சதவீத ஆசிரியர்கள் 13.03.2021 (சனிக்கிழமை) அன்றும், மீதமுள்ள 50 சதவீத ஆசிரியர்கள் 14.03.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் நடைபெற உள்ள பயிற்சி வகுப்பிற்கு செல்ல அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 13 இல் (சனிக்கிழமை) அன்று தேர்தல் பயிற்சி நடந்த மையத்திலேயே 14.03.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடம் ஓசி சம்பளம் வாங்குன?
இப்ப கசக்குதோ?