தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்கள் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டதால் மதிப்பெண் வழங்குவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் குழப்பத்தில் உள்ளன.
10 ஆம் வகுப்பு மாணவர்கள்:
தமிழக்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பாடத்திட்டங்களை நிரப்ப முடியாத நிலை காரணமாக தமிழக அரசு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என பெரும் குழப்பத்தில் உள்ளன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு அரையாண்டு, காலாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
9 முதல் 11ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு மறுபரிசீலனை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!!
ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாமல் எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என பள்ளிகள் கேள்வியை முன்வைக்கின்றனர். சில மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என பல முயற்சிகளை செய்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டால் அவர்கள் நிலை மோசமாகிவிடும். எனவே அனைவருக்கும் சமமான முறையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என அரசு தேர்வுத்துறைக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்