தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு தேதி:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சிபிஎஸ்இ பொதுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேத்தி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் பள்ளிகளுக்கு முதல் மற்றும் 3வது சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!
தமிழகத்தில் உருது படித்த ஆசிரியர்கள் இல்லை, உருது படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள் என தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு 45 என அறிவிக்கப்பட்டது குறித்து கோரிக்கை எழுந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஆலோசனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
மத்திய அரசின் ‘நிஸ்தா’ திட்டம் – 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி!!
மேலும் தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்புகள் உள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்”, இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்