தமிழில் பெயர் எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியீடு!
தமிழக மக்கள் தங்களது பெயரை தமிழில் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என தொழிற்துறை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மே 7 ஆம் தேதி முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள துறைகள் அனைத்தின் பெயரையும் தூய தமிழில் மாற்றம் செய்துள்ளது. சுகாதாரத் துறை, மருத்துவம் & மக்கள் நலவாழ்வு துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துத்துள்ளார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை – வலுக்கும் எதிர்ப்பு!
மேலும் அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழ் பரம்பரை கழகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும், அதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும். தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் பேசிய அவர், செங்கல்பட்டு திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ.5.90 கோடியில் உள்பு உற்பத்தி செய்யப்படும். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும் மாநிலம் முழுவதும் ரூ.150 கோடியில் 10 சிப்காட் தொழிற்பூங்கா மேம்படுத்தப்படும். விருதுநகரில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும் போன்ற திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.