தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை – வலுக்கும் எதிர்ப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் தடுப்பு பணியாக விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும். அனைத்து பகுதிகளிலும் மக்கள் தெருக்களிலும், முக்கிய வீதிகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு விமரிசையாக கொண்டாடுவர். அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாள் பக்தர்கள் வழிபட்ட விநாயகர் சிலையை நதி கரைக்கு சென்று கரைப்பர். நடப்பு ஆண்டு கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மது, மாமிசம் விற்பனைக்கு தடை – முதல்வர் அதிரடி உத்தரவு!
மேலும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் சுற்றுப்புறத்தில் வைத்து செல்வதற்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த சிலைகளை முறைப்படி அகற்ற இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் அரசின் விதியை மீறி விழா கொண்டாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் பலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு தடை விதித்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பு சங்கத்தினர் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.