தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகப்பகுதிகளின் மேல்‌ நிலவும் வளிமண்டல சுழற்சியினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌ :

தமிழகத்தின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 1) மற்றும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

01.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌,

02.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌,திருப்பூர்‌, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தூத்துக்குடி, மதுரை, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

03.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கன மழையும்‌, ஈரோடு, மதுரை, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ , வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

04.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,
விருதுநகர்‌, மதுரை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ , வேலூர்‌, மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

05.08.2022: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னையை பொறுத்தவரை :

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

இன்று ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

01.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தெற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

02.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

03.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

04.08.2022, 05.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேலும், தென்‌ மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!