தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து வங்கக்கடலில் கடந்த மாதம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது இந்த தொடர் கனமழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றைய வானிலை அறிக்கையின் படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 18ம் தேதி வரை லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
நாளை (ஆகஸ்ட் 17) பள்ளிகளுக்கு விடுமுறை – ஒடிசா அரசு திடீர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும் குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.