நாளை (ஆகஸ்ட் 17) பள்ளிகளுக்கு விடுமுறை – ஒடிசா அரசு திடீர் அறிவிப்பு!

0
நாளை (ஆகஸ்ட் 17) பள்ளிகளுக்கு விடுமுறை - ஒடிசா அரசு திடீர் அறிவிப்பு!
நாளை (ஆகஸ்ட் 17) பள்ளிகளுக்கு விடுமுறை - ஒடிசா அரசு திடீர் அறிவிப்பு!
நாளை (ஆகஸ்ட் 17) பள்ளிகளுக்கு விடுமுறை – ஒடிசா அரசு திடீர் அறிவிப்பு!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை:

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள மகாநதி ஆற்றுப்படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் பொதுமக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களை கவனமாக இருக்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மோ ஸ்கூல் அபியான் ஆகியவற்றின் கீழ் பெறப்பட்டுள்ள சொத்துக்கள், மின்னணு மற்றும் மின்சார உபகரணங்கள், பள்ளிகளின் பதிவுகள், MDM பங்குகள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்கும்படியும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்திலேயே ஜகத்சிங்பூர் மாவட்டம் தான் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மேலும், அங்குள்ள பள்ளிகள் முழுவதும் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும், வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றவும், நிவாரணம் வழங்கவும் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கடைகள் திறப்பு பற்றி அறியும் வசதி – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு ஜெகத்சிங்பூர் கலெக்டர் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனைத்து தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும் இது குறித்தான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, வெள்ளநீர் சூழ்ந்துள்ள அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் எனவும், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 17 (நாளை) வரை விடுமுறை எனவும் அறிவித்துள்ளார். இதே போல, நாயகர் மாவட்டத்தில் உள்ள 32 பள்ளிகளும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!