அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 31.07.2021, 01.08.2021 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, இருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
02.08.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் +2 தனித்தேர்வர்களும் ஆல்பாஸ் – அரசு அறிவிப்பு!
03.08.2021, 04.08.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுஇகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
TN Job “FB Group” Join Now
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
வங்க கடல் பகுதிகள்
31.07.2021: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்
31.07.2021 முதல் 04.08.2021 வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்துடன் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.