தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தகவல்கள் கூறுகிறது
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது மழை பொழிவு பெரிதாக இல்லை வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இருப்பினும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது லேசான மழை பொழிவு ஏற்படுகிறது. கடந்த தினங்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை 6 மணிமுதல் இதற்கெல்லாம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தினசரி வானிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை குறித்த அறிக்கையை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
15.02.2022 16.02.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே
நிலவும்.
17.02.2022 முதல் 19.02.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.