தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை , டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
16.12.2021,17.12.2021: ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
18.12.2021,19.12.2021: தென் மாவடங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வெல்லம் கொள்முதலில் சர்ச்சை!
20.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்யஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 16.12.2011 முதல் 20.12.2021 வரை: குமரிக்கடல் பகுஇகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 இலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகறார்கள்.
பெண்களின் திருமண வயது இனி ’18’ இல்லை, 21 ஆக உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
குறிப்பு: நாளை (17 ஆம் தேதி) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும் .
17.12.2011 முதல் 19.12.2021 வரை: பூமத்திய ரேகை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.