பெண்களின் திருமண வயது இனி ’18’ இல்லை, 21 ஆக உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலே நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமண வயது உயர்வு:
இந்தியாவில் முந்தைய காலகட்டத்தில் சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. பின்னர் குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக ஆண் மற்றும் பெண் இருவருக்கும் குறிப்பிட்ட வயது நிர்ணயிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 12 வயது முதல் தொடங்கி இதுவரை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது பெண்களுக்கு திருமண வயது 18 என்றும், ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆணவ பேச்சால் தள்ளிப்போன ரிலீஸ் – ‘என்ன சொல்லப் போகிறாய்’ அஸ்வின் உருக்கமான பதிவு!
அந்த வகையில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006ன் படி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் 18 வயது நிறைவடைந்து திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் சிலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. அதனால் கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவின் போது பேசிய பிரதமர் மோடி அவர்கள் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் நாளை (டிச.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
அதன்படி 10 வல்லுநர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அதனை தொடர்ந்து பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நடப்பு கூட்டத்தொடரில் இது குறித்து குழந்தை திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சட்டம் இயற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவின் மூலம் ஆண்களின் திருமண வயதிற்கு நிகராக பெண்களின் திருமண வயது மாறுவது குறிப்பிடத்தக்கது.