தமிழகத்தில் மூடுபனி, வறண்ட வானிலை எச்சரிக்கை – அறிக்கை வெளியீடு!

0
தமிழகத்தில் மூடுபனி, வறண்ட வானிலை எச்சரிக்கை - அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் மூடுபனி, வறண்ட வானிலை எச்சரிக்கை - அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் மூடுபனி, வறண்ட வானிலை எச்சரிக்கை – அறிக்கை வெளியீடு!

தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும்‌ என்றும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வானிலை தகவல்

26.12.2021, 27.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.12.2021, 29.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான /மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

30.12.2021: கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மூடுபனி எச்சரிக்கை:

26.12.2021, 27.12.2021: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உச்சம் தொடும் கொரோனா, மீண்டும் ஊரடங்கு? பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!