தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் – இன்றைய வானிலை நிலவரம் இதோ!

0
தமிழகம் முழுவதும் நிலவிவரும் அதிகபட்ச வெப்பநிலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நிலவிவரும் அதிகபட்ச வெப்பநிலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நான்கு சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39.8 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

மாதம் ரூ.143000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதன் பிறகு வரும் நாட்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடல் பகுதிக்கு அச்சமின்றி மீன் பிடிக்க செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!