தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – மீண்டும் தேர்வு! முதலமைச்சர் தனிப்பிரிவு தகவல்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் செய்யப்படாத தேர்வர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் தனிப்பிரிவு:
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னர் TN TRB தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பொதுவான தேர்வுகள் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்தது. அதன் பின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்வதற்கு TET தேர்வு கொண்டு வரப்பட்டது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் செய்யப்படாமல் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நியமனம் செய்வது குறித்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விளக்கம் கோரியிருந்தார். அதற்கு கடந்த 2017 – 2018ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022 பட்டியல் வெளியீடு!
மேலும் இது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் அளித்துள்ளது. கடந்த 2020 – 21ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட தேர்வு கால அட்டவணையில் TET தேர்வு நடத்துவது மற்றும் ஏற்கனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதித்தேர்வு நடத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.