தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது வேகமாக பரவி வரும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
ஓமைக்ரான் பரவல்
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவித்தது. அதனால் மாணவர்கள் கல்வியை தொடர ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் கொரோனா நோய் தடுப்பூசி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றியதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம்!
அத்துடன் கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8 வகுப்பு மாணவர்கள் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான் ‘ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. தற்போது தமிழகத்திலும் ஓமைக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ஓமைக்ரான் பரவலை தடுக்க இன்று முதல் டிச.31 வரை 144 தடை உத்தரவு – அரசு அறிவிப்பு!
அவர் கூறியதாவது, மாணவர்கள் மனதில் உள்ளவற்றை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் அறிந்து இருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் ஓம்காரன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வருகிற ஜனவரி மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் விளக்கம் தெரிவித்துள்ளார்.