தமிழகத்தில் நாளை (ஜன. 28) பள்ளிகள் இயங்கும் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!
தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யும் விதமாக நாளை (27.01.2023) சென்னையில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பள்ளிகளுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிவிடும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருந்தது. பல மாவட்டங்களில் அதிகமான மழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் பள்ளிகளில் விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு? வெளியான தகவல்!
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை காரணமாக கடந்த மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யவே நாளை பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை பாட வேளை பின்பற்றப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.