தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தற்போது கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. இதனை அடுத்து சட்டப்பேரவை தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் 16 வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவே ஆகும். இந்த கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரை மூலம் தொடங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தெரிவித்தார்.
ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
அதன்படி தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல், 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து அவைத்தலைவர் அப்பாவு அவர்கள் தலைமையில் அலுவல் கூட்டம் நடைபெற்று எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதற்கான கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
மேலும் கூட்ட தொடரில் பங்கேற்ற இதர கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதிலளித்து வந்தார். இதை தொடர்ந்து கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ( ஜூன் 24 ) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதிலுரை ஆற்றினார். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நிலையில் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் அவை தலைவர் அப்பாவு அவர்கள் ஒத்திவைத்தார்.