தேசிய அளவில் தமிழகம் முதலிடம் – கொரோனா தடுப்பூசி வீணடிப்பு தவிர்ப்பு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொடுத்த அளவிலிருந்து வீணடிக்காமல் நபர்களுக்கு தமிழகம் தடுப்பூசியை செலுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இடையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. அதன் பிறகு 2021 மார்ச் மாதத்தில் மீண்டும் கொரோனா வேகமெக்கத் தொடங்கியது. இது உருமாறிய கொரோனா அதிக வீரியத்துடன் பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதல் அலையில் தப்பித்த இந்தியா இரண்டாம் அலையில் சிக்கிக் கொண்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாமல் திணறினர்.
தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை – கடும் போட்டி!
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. அதனை முழுமையாக செலுத்தி முடிக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் கையாண்டது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவுகிறது என மாநில அரசுகள் மத்திய அரசிடம் புகார் அளித்து கூடுதல் தடுப்பூசிகளை வழங்கவும் கோரிக்கை விடுத்தது. அதற்கு தடுப்பூசிகளை மாநில அரசுகள் வீணடிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.
டிப்ளமோ முடித்தவர்க்கு அரசு மருத்துவமனையில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் !!!
தற்போது மாநிலங்கள் முழுவதும் நடத்திய ஆய்வில் மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி மத்திய அரசு அளிக்கப்பட்ட தடுப்பூசியில் வீணடிக்காமல் கொடுத்த அளவில் இருந்து கூடுதல் நபர்களுக்கு செலுத்தியதில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களும் தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்