தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை – கடும் போட்டி!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்த நிலையில் கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வரும் ஜூலை 26 முதல் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதம் செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் மே 5ம் தேதி நடக்கவிருந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பின் மத்திய கல்வி வாரியம் மற்றும் இந்தியாவில் சில மாநிலங்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. அதன் படி குழு அமைக்கப்பட்டு மதிப்பீட்டு முறைகளை ஆராய்ந்து தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்துள்ளனர். இதனால் இந்தாண்டு கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு!
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், கல்வி கட்டணம் போன்றவை குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் கல்லூரிகளுக்கு வந்து கேள்வி எழுப்பி வருவதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வரும் ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், இந்த இணையதளத்தில் 150 கலை, அறிவியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளதாவும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.