தமிழக அரசின் மாவட்ட சுகாதார மையத்தில் வேலை – ஜன.31ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதார மையத்தில் மாவட்ட தர ஆலோசகர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார மையத்தின் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மாவட்ட தர ஆலோசகர் பணியிடத்திற்கான தகுதியான நபரை தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இப்பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு குறைவான எண்ணிக்கையில் காலிப்பணியிடம் இருப்பதால் விண்ணப்பத்தார்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதையடுத்து இதற்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – மார்ச் 1 வரை கால அவகாசம்!
இப்பணியிடத்திற்கு இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை The Executive Secretary / Deputy Director of Health Services Villupuram District, Health society O/o Deputy Director of Health Services, Villupuram District என்ற அஞ்சல் முகவரிக்கு ஜனவரி 31ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். அத்துடன் விண்ணப்பத்துடன் தங்களின் சுய விவரக்குறிப்பு மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.