தமிழக அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் – முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் இது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரிடம் வேண்டுகோள்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும். இவ்வாறு தரம் உயர்த்துவதற்கு தகுதி உள்ள பள்ளிகளிடம் இருந்த்து மனுக்கள் பெறப்பட்டு முறையான ஆய்வுக்கு பின்னர் பணிகள் நடைபெறும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதன் பின்னர் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.
கொரோனா தடுப்பு மருந்துகள் பட்டியலில் ரெம்டெசிவிர் நீக்கம் – WHO அறிவிப்பு!!
உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் அவர்கள் இது குறித்து கூறுகையில், கடந்த ஜனவரி மாதத்தில் 35 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் அரசு உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவில்லை. மேலும், பிப்ரவரியில் ஆசிரியர்களுக்கான வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனால் ஆசிரியர்கள் 4 மாத ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தேர்தல் காரணமாக இது தொடர்பான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். தேர்தல் முடிந்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. 4 மாத ஊதியம் கிடைக்காமல் மருத்துவ சிகிச்சைக்கு கூட போதிய பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.