தமிழக அரசின் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியீடு – எதிர்பார்ப்புகள்!
முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வருகிற ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளை அறிக்கையில் என்னென்ன விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை அறிக்கை:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மாநில அரசு கொரோனா கால கட்டத்தில் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதை அடுத்து தமிழகத்தில் 16 வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 21) கூடியது. இதை ஆளுநர் அவர்கள் தனது உரையுடன் தொடங்கி வைத்தார். தனது உரையின் போது ஜூலை மாதத்தில் தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தற்போது வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து – ஆளுநர் அறிவிப்பு!!
வெள்ளை அறிக்கை என்பது குறிப்பிட்ட பிரச்சனை குறித்து முழுமையாக ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரு ஆவணம். இதன் மூலம் மாநிலத்தின் நிதி நிலைமையையும் அறிய முடியும். மேலும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிதி சுமைக்கான காரணம் குறித்து இதில் விளக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்ததால் வருவாய் பற்றாக்குறையும் அதிகரிக்க தொடங்கியதை விளக்க வாய்ப்புள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வருவாய் இன்றி திட்டங்களை மேற்கொள்வதற்காக கடன் வாங்கியதையும் அந்த கடனுக்கான வட்டியால் செலவினங்கள் அதிகரிப்பதையும் விவரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை 2020-21 ஆம் நிதியாண்டில் 5 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கான காரணங்கள் விளக்கப்படும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு அதிகம் விற்கப்படுவதால் நமக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாயும் மிக குறைவு. அதேபோல் மதுக்கடைகள் வருவாய் மூலம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியும், பெட்ரோல், டீசல் விற்பனையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியும் அரசின் வருமானம். இவைகள் அனைத்தும் அரசின் வெள்ளை அறிக்கையில் இடம் பெற வாய்ப்புள்ளது.