அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து – ஆளுநர் அறிவிப்பு!!
கொரோனா பரவலின் எதிரொலியாக இந்த வருடமும் அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்ற நோய் தொற்று பரவி வருகின்றது. தற்போது வரை இந்த பாதிப்பு முழுவதுமாக குறைவதாக இல்லை. இந்த நோய் தாக்கத்தினால் தற்போது வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி? முதல்வருக்கு கோரிக்கை!
கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல மாநிலங்களில் கோவில்கள் மற்றும் மத சம்மந்தமான விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு காஷ்மீரில் புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரை கொரோனா பரவலின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதே போல் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட இருப்பதாக காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். அடையாள ரீதியான தரிசனம் மட்டுமே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஆண்டுதோறும் இமயமலையில் 3300 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனிலிங்கத்தினை மக்கள் தரிசித்து வருவர். இந்த யாத்திரைக்காக 2 மாதங்களுக்கு முன்பாகவே புறப்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவது குறிப்பிடத்தக்கது.