சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழகத்தில் தங்கம் விலை 37 ஆயிரத்தை தாண்டி விற்பனையான நிலையில் சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகைப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்து கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற 60,000 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – தமாகா சார்பில் கோரிக்கை!
பண்டிகை, திருவிழா மற்றும் சுப முகூர்த்த தினங்களில் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். ஆனால் அன்றைய தினங்களில் கூட நகை விலை அதிகரித்து தான் காணப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் நகை வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கடந்த நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி நகை வாங்கலாம் என்று நகைப்பிரியர்கள் எண்ணி கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடர்ந்து 3 நாட்கள் தங்கம் விலை அதிகரித்தது. அதனை தொடர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்தை தாண்டியது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!
இந்த நிலையில் சற்று மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,976க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,622க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.70.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 70,400 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.