தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற 60,000 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – தமாகா சார்பில் கோரிக்கை!
தமிழகத்தில் இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்காக காத்திருக்கும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று த.மா.கா கட்சி சார்பில் ஜி.கே வாசன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆசிரியர் பணி:
தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வானது சீனியரிட்டி மற்றும் TN TRB தேர்வு வாரியம் அடிப்படையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு என்று பிரத்யேகமாக ஒரு தேர்வு முறை உருவாக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!
அதாவது கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு TET தேர்வை அன்றய முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்தார். அன்று முதல் இன்று வரை TET தேர்வு மூலம் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வில் 60% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் முறையும் உள்ளது. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முதல்நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அரசு முக்கிய உத்தரவு!
தேர்ச்சி பெற்றும் பணிநியமனம் செய்யப்படாமல் 60 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கை 177 இல் 2013ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மறுதேர்வு எதுவும் வைக்காமல் தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்குமாறு த.மா.கா கட்சி சார்பில் ஜிகே. வாசன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.