தமிழக வணிகவரித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு – அதிகாரிகள் கவனத்திற்கு!
கட்டுமான பொருட்கள் உற்பத்தியில் பயன்படும் மின் அளவை கணக்கீட்டு வரி ஏய்ப்பு ஏதும் நடக்கிறதா? என கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மின்பயன்பாடும், வரிஏய்ப்பும் :
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து, முதல்வர் தலைமையில் புதிய இலாகாக்கள் சார்ந்த துறை அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் அமைச்சராக p.மூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பதவியேற்புக்கு பிறகு பத்திர பதிவு மற்றும் வணிக வரி சார்ந்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆதார் தொடர்பான 2 சேவைகள் நிறுத்தம் – UIDAI அதிரடி!
இதையடுத்து தற்போது இவர் தலைமையில் நேற்று அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வணிகவரி ஆணையர் மற்றும் வணிக வரி உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மிக தீவிரமாக செயல்பட்டு இந்த துறையில் ஏற்படும் வரி இழப்பை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர் அதிகாரிகளிடம் பேசும்போது, வீடு கட்ட பயன்படும் கட்டுமான பொருட்களான இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பிளைவுட் பொருட்கள் சார்ந்த உற்பத்தியில் பயன்படும் மின் அளவை அளவுகோலாக எடுத்து கொண்டு, இதை கண்காணித்து ஏதேனும் வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா? என கண்காணியுங்கள் என அறிவுறுத்தினார். மேலும், இந்த செயலை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும், இந்த அறிக்கையானது தகுந்த ஆதாரபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.