தமிழகத்தில் பழங்குடியினருக்கு ரேஷன் கார்டு – உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கான பல சிறப்பு திட்டங்களின் நன்மைகளும் வழங்கப்படுகின்றது. மேலும், மாத மாதம் பொதுமக்களுக்கான தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்பட்டது.
இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர்!
மேலும், அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பையும் அரசு வழங்கியது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டை சேர்ந்த மல்லிகா என்ற பெண் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 1.5% பேர் பழங்குடியினர் என்றும், கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்ததாகவும், அரசு குடும்ப அட்டை மூலம் வழங்கிய நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை கூட பெறமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழகத்தில் பழங்குடியினருக்கும் ரேஷன் அட்டை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த
TN Job “FB Group” Join Now
நீதிபதிகள், இந்த கோரிக்கை தொடர்பாக 15 நாட்களுக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். இந்த மனுவினை மனுவின் படி, அனைத்து பழங்குடியினரையும் முறையாக ஆய்வு செய்து பழங்குடியினருக்கு குடும்ப அட்டை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.