தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – அரசாணை வெளியீடு!!

0
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் - அரசாணை வெளியீடு!!
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் - அரசாணை வெளியீடு!!
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 சதவீத ஆக்சிஜன் படுக்கை, ஐசியு படுக்கைகளை பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும் என அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் பெரும் சிரமப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் உரிய மருத்துவம் பார்க்க முடியாமல் நோயாளிகள் உயிரிழந்த சோகம் கூட ஏற்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் – பணியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என கடந்த மே 7 ஆம் தேதி முதல்வர் உத்தரவிட்டார். அதற்கான அரசாணை மே 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் படி, அதிதீவிர மற்றும் அதிதீவிரமில்லாத அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்யும் கட்டணம் மற்றும் தேவையான மருந்துகள் மற்றும் அனைத்து பரிசோதனைகளுக்குமான கூடுதல் கட்டணம் போன்றவை இந்த திட்டம் மூலமாக மருத்துவ காப்பீடு நிறுவனம் நேரடியாக வழங்கும்.

இதனை மீறி கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகள் குறித்த புகார்களை 104 எண் மூலமாக தெரிவிக்கலாம். இந்நிலையில் அரசு திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட சதவீத ஆக்சிஜன் படுக்கை, தீவிர சிகிச்சை படுக்கைகளை பிரத்யேகமாக ஒதுக்கி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் படுக்கைகளை ஒதுக்கும் அரசாணையில் தேவையான திருத்தம் மேற்கொள்வது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். அதன்படி தற்போது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 50 சதவீத படுக்கைகளில், 10 சதவீதத்தை (ஆக்சிஜன், ஐசியு படுக்கை வசதி) முதல்வர் திட்டத்தின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!