தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 23 நாட்கள் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடர்:
தமிழகத்தில் புதிய ஆட்சி அமலுக்கு வந்த பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.
சிறப்பாசிரியர் பணிக்கான தமிழ் வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் – ஆசிரியர்கள் வேதனை!
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் காவல்துறை குறித்து பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார்.
சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு – மாலை விலை நிலவரம்!
இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா போன்ற 20 முக்கிய சட்ட திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 23 நாட்கள் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.