தமிழக 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு – அரசின் முக்கிய தகவல்!

0
தமிழக 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு - அரசின் முக்கிய தகவல்!
தமிழக 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு - அரசின் முக்கிய தகவல்!
தமிழக 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு – அரசின் முக்கிய தகவல்!

தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மனவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று மாணவர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

தமிழகத்தில் தற்போது பள்ளிக்கல்வித்துறை மிகவும் துடிப்பாக செயலாற்றி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வமுடன் இருக்கவும், அவர்களுக்கு ஊக்கத்தை அதிகரிக்கவும் பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி தரம் மேம்படும் என்று அரசு எதிர்பார்க்கிறது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் மாணவர்களின் கல்வியானது எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

மாணவர்களின் உயர்கல்விக்கு பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தான் அடிப்படையாக இருக்கிறது. இதனால் அகமதிப்பீடு முறையில் மதிப்பெண் வழங்குவது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் கடந்த 2021-2022ம் கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, தகுந்த கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

மத்திய அரசு செய்த தரமான சம்பவம்.. அதிரடியாக குறைய போகும் விலைவாசி – பொதுமக்கள் ஆர்வம்!

Exams Daily Mobile App Download

ஆனால், 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வைத்து தான் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் நாடு அரசுத் தேர்வு இயக்குனரகம், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைகளின்படி, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15ம் தேதியான நாளை வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்றும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!