மத்திய அரசு செய்த தரமான சம்பவம்.. அதிரடியாக குறைய போகும் விலைவாசி – பொதுமக்கள் ஆர்வம்!
நாளுக்கு நாள் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப விலைவாசியும் உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பலர் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு, 34 வகை மருந்துகளை தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
தேசிய அத்தியாவசிய மருந்துகள்:
மாறி வரும் பொருளாதார நிலைக்கு ஏற்ப அனைத்து பொருட்களின் விலையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமே உள்ளது. தங்கம் முதல் பெட்ரோல், டீசல் வரை அனைத்து பொருட்களின் விலை உச்சத்தை தொட்ட வண்ணம் தான் உள்ளது. இதில் அத்தியாவசிய மருந்துகளும் அடங்கும். இதனால் மக்கள் பலரும் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட மொத்தம் 34 வகை மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த பட்டியல் முதன்முதலில் 1996 ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் 2015 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீண்டும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்பட 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை : கிடுகிடுவென சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Exams Daily Mobile App Download
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த பட்டியலை வெளிியிட்டார். இவ்வாறு இந்த பட்டியலில் இந்த மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த மருந்துகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் சேர்க்கப்படுவதன் நோக்கமே அனைத்து தரப்பு மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்