தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2022 – அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு!

0
தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2022 - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு!
தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2022 - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு!
தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2022 – அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வருகிற அக்டோபர் 1ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு குறித்த சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட கல்வி இயக்குனர்களுக்கு அரசு தேர்வு இயக்குனர் அனுப்பியுள்ளார்.

திறனறித் தேர்வு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு நடப்பு ஆண்டு முதல் நடைபெற உள்ளது. இத்தேர்வை 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கல்வி உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப். 18 வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் பள்ளிகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளிகள்/ அரசு உதவி பெறும் பள்ளிகள்/ கேந்திரிய வித்தியாலய பள்ளிகள், தனியார், CBSE உள்ளிட்ட பள்ளிகளின் வாயிலாக தேர்வு எழுத மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அரசு தேர்வு இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வை ஒரு தேர்வு அறையினுள் 20 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வை எழுத வேண்டும். அதன்படி ஒரு தேர்வு மையத்தில் 300 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். அத்துடன் தேர்வு மையங்கள் மாணவர்களின் ஒன்றியத்தில் அல்லது அருகாமையில் அமைந்திருக்க வேண்டும். இப்பணியை மிகுந்த கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் எந்தவொரு பிரச்சனை ஏற்படாதவாறு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து இப்பணியை நாளைக்குள் (செப.14) முடிக்குமாறும் அரசு தேர்வு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!