கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு – மத்திய அரசு நடவடிக்கை!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது கோவின் இணைய பக்கத்தில் மொத்தம் 12 மொழிகள் இடம் பெற்றுள்ளது.
தமிழ் மொழி சேர்ப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி தினசரி உயிரிழப்புகள் எதிர்பாராத அளவு புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்த தொற்றிற்கு தீர்வு காண உடனடி மருந்துகள் இல்லை. பிறகு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசிகள் மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மாநில அரசுகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு செலுத்தி வருகிறது.
டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – காப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பு!
இந்த தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பற்றாக்குறை நிலவுகிறது. அரசு 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குகிறது. இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வதற்காக மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசிகளை மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த இணையதளத்தில் முதலில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டும் மட்டுமே இருந்தது . பிறகு மற்ற மொழிகளையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகள் சேர்க்கப்பட்டது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து, ஆங்கிலம், இந்தி தவிர பிற மொழிகள் கோவின் இணையப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. மத்திய அரசு 2 நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தது. தற்போது கோவின் தடுப்பூசி முன்பதிவு இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அசாமி, பெங்காலி, கன்னடம், ஒரியா போன்ற 12 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கோவின் இணையதளம் ஸ்மார்ட் போன்களில் செயலிகள் வடிவிலும் பயனில் உள்ளது.