டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – காப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பு!
காப்பீட்டு நிறுவனங்களில் புதிதாக டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே காப்பீடு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்:
கொரோனா பரவல் காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் அதிக க்ளைம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் புதிதாக டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை ஒருவர் சமர்ப்பித்தால் மட்டுமே டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கொடுக்கப்படும் என இரண்டு காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் படி மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா AIA ஆகிய நிறுவனங்களில், பாலிசி எடுக்கும் தங்களது வாடிக்கையாளர்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளன.
இன்று முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என டாடா AIA நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காப்பீட்டு நிறுவனங்களின் அறிவிப்பால் வரும் நாட்களில் இத்தகைய கட்டுப்பாடுகளை அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்த 84 நாட்கள் கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருவர் காப்பீட்டு தொகை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி, ஒருவரது இறப்புக்கு பிறகு, அவரது குடும்பத்தினரின் வருங்கால தேவைகளுக்கு பயனளிக்க கூடியதாக உள்ளது. அதனால் இத்தகைய பாலிசிகளை பெற்று கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.