தமிழக கல்லூரிகளில் பாட திட்ட மாற்றம்.. அரசின் அதிரடி நடவடிக்கை – முழு விவரம் உள்ளே!
தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான பாட திட்டத்தை மாற்றுவது குறித்து அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த தடை இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலை & அறிவியல் கல்லூரி:
தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் அதிக போட்டி நிலவுகிறது. குறைவான இடங்களில் இளைஞர்கள் தங்களை தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அவர்களுக்கான வேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும். இந்நிலையில், தமிழகத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பை பெற சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பில் நாட்டில் சராசரி விகிதம் 27.1% ஆக உள்ள போதிலும், தமிழகத்தின் மொத்த சேர்க்கை விகிதம் 51.4% ஆக உள்ளது. ஆனாலும், தமிழக கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டம் காலக்கெடுவை அடைந்து விட்டதால், வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனை சீரமைக்க விரும்பிய தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மறுசீரமைக்க கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காகிதம் இல்லா காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
Exams Daily Mobile App Download
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அரசு இறுதி முடிவினை எடுக்கும். மேலும், முன்னதாக முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும், அதன்பின்னர், இறுதியாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் சீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்