சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை? – மத்திய அரசு விளக்கம்!
நாட்டின் அதிக அதிகாரம் மிக்க நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திற்கு நாட்டின் பிற பகுதிகளில் கிளை அமைக்க இருப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
உச்சநீதிமன்றம்:
இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சில தடை மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
ஆகஸ்ட் 16ம் தேதி அவதூறு வழக்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆஜர் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
உயர் நீதிமன்றங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் பிற பகுதியில் வழக்குகளை எளிதில் தாக்கல் செய்யவும், கால தாமதமின்றி விரைவான விசாரணைக்காகவும் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற கிளை மதுரையில் இயங்குகிறது. மும்பை உயர் நீதிமன்ற கிளை ஒன்று நாக்பூரில் இயங்குகிறது. அலகாபாத் உயர் நீதிமன்ற கிளை லக்னோவில் இயங்குகிறது. இது போல் உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று பல தரப்புகளில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைய இருப்பதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி மத்திய அரசின் பத்திரிகை தகவல் துறையின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்து சட்டத் துறை அமைச்சகத்திடம் விசாரித்து இது போலியான செய்தி என்று கண்டறிந்துள்ளனர். உடனடியாக மத்திய அமைச்சகம் இது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் அமைக்க உள்ளதாக பரவி வரும் செய்திகள் பொய்யானது என்று தனது அதிகாரபூர்வ டிவீட்டர் தலத்தில் தெரிவித்துள்ளது.