தமிழகத்தில் இயற்கை புகையிலைக்கு ஆதரவு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!
தமிழகத்தில் இயற்கையாக விளைந்த புகையிலையை விற்பனை செய்வதற்கு முன்னதாக இருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு:
தமிழகத்தில் தற்போது புகையிலை, பான், குட்கா போன்ற பொருட்களுக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் முழுமையான மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. மது, புகையிலை, பான் மற்றும் குட்கா போன்ற போதை தரும் பொருட்களால் தான் நாட்டில் அதிக அளவிலான குற்றங்கள் நடந்து வருகிறது. இதனால் தான் அவற்றை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் காவலர்களுக்கு ஒரே சீருடை – பிரதமரின் புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில், கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை அதிரடியாக காவல் உயர்மட்ட அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இயற்கை புகையிலை விற்பனைக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு தடை இல்லை என்றும், நேரடியாக விவசாயிகளிடம் இதற்கான இலைகளை பெற்று அதில் வெள்ளம் கலந்த நீரை தெளித்து விற்பனை செய்யலாம் என்றும், பதப்படுத்தும் செயல்முறைகளுக்கும் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.