நாடு முழுவதும் காவலர்களுக்கு ஒரே சீருடை – பிரதமரின் புதிய திட்டம்!
நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது காவலர்களுக்கான சீருடை குறித்த ஒரு புதிய திட்டத்தை பிரதமர் தொடங்க உள்ளார்.
புதிய திட்டம்:
நாடு முழுவதும் அனைத்து முக்கிய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் போன்றவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலங்களுக்கு இடையில் மக்கள் மாற்றத்தை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் ஆவணங்களில் எந்த வித சிக்கலும் வர கூடாது என்பதற்காக தான் ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்றவற்றை அரசு வழங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் சட்டம் ஓழுங்கை நிலை நாட்டும் காவலர்களுக்கு மாநில அளவிலான இயற்றப்பட்ட சட்டங்கள் உள்ளது, இதனை தவிர்த்து நாடு முழுவதும் காவலர்களுக்கு “ஒரே நாடு ஒரே சீருடை” திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக காவலர்களுக்கான சட்டங்கள் மாநில எல்லைகளை கடந்தும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், மாற்றப்பட உள்ளது என்று பிரதமர் காணொளி வாயிலாக நடந்த கலந்தாய்வில் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர்கள் மாநாட்டின் 2ம் நாள் – சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி உரை!
Follow our Instagram for more Latest Updates
இந்த நடைமுறையை செயல்படுத்த, காவல் துறை, மத்திய அமைச்சகம் போன்றவை ஒப்புதல் அளித்த பிறகு தான் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் அரசியலமைப்பின் கட்டுப்பாடுகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.